செய்திகள்
விபத்து

அரியமங்கலத்தில் கார் மோதி பெண் பலி

Published On 2020-01-16 14:38 GMT   |   Update On 2020-01-16 14:38 GMT
அரியமங்கலத்தில் நடந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கார் மோதி இறந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி அரியமங்கலம் ஸ்ரீநிவாசாநகர் பகுதியில் சம்பவதன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அந்த மூதாட்டி மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்தப் மூதாட்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அந்த மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சுமார் 5 அடி உயமுள்ள அவருக்கு பற்கள் இல்லை, பச்சை மஞ்சள் பூப்போட்ட சேலை அணிந்திருந்தார்.

இதுபற்றி திருச்சி தெற்கு போக்குவரத்து குற்ற புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை வ. உ. சி. நகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பாலசுப்பிரமணியன் கைது செய்தனர்.  அவர் மீது தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News