செய்திகள்
படகு கவிழ்ந்து விபத்து - நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
நடுக்கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்ததால் தத்தளித்த 6 மீனவர்களை மீட்ட மீனவர்கள் அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த டோமினிக் (வயது 55), இசக்கிராஜா, ராஜ், சூசை, சிலுவை மகன் ராஜ், இளங்கோ ஆகிய 6 பேர் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை நாட்டுப்படகில் கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று காலை 11 மணிக்கு குலசேகரபட்டினத்தில் இருந்து 41 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் நடுக்கடலில் மிதந்த மரத்தடியை பிடித்தவாறு தத்தளித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று புன்னைக்காயலை சேர்ந்த எடிசன் உள்பட 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு 11 மணிக்கு சென்றபோது நடுக்கடலில் 6 மீனவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக 6 பேரையும் மீட்டு தங்கள் படகில் அழைத்துவந்தனர். 12 மணி நேரமாக கடலில் தத்தளித்ததால் 6 மீனவர்களும் மயக்க நிலையில் காணப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை இன்று காலை புன்னைக்காயலில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த டோமினிக் (வயது 55), இசக்கிராஜா, ராஜ், சூசை, சிலுவை மகன் ராஜ், இளங்கோ ஆகிய 6 பேர் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை நாட்டுப்படகில் கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று காலை 11 மணிக்கு குலசேகரபட்டினத்தில் இருந்து 41 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் நடுக்கடலில் மிதந்த மரத்தடியை பிடித்தவாறு தத்தளித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று புன்னைக்காயலை சேர்ந்த எடிசன் உள்பட 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு 11 மணிக்கு சென்றபோது நடுக்கடலில் 6 மீனவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக 6 பேரையும் மீட்டு தங்கள் படகில் அழைத்துவந்தனர். 12 மணி நேரமாக கடலில் தத்தளித்ததால் 6 மீனவர்களும் மயக்க நிலையில் காணப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை இன்று காலை புன்னைக்காயலில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.