செய்திகள்
சாதன அள்ளி

ராயக்கோட்டை அருகே லாரி மோதி விவசாயி பலி

Published On 2020-01-08 14:29 GMT   |   Update On 2020-01-08 14:29 GMT
ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்துள்ள நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாதனள்ளி (வயது 40), விவசாயி. இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நேற்று சொந்த வேலையின் காரணமாக அவரது இருசக்கர வாகனத்தில் வெள்ளி சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி சாதனள்ளி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சாதனள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News