செய்திகள்
ஆட்டையாம்பட்டி அருகே ஊர்ப்பணம் ரூ.70 லட்சம் மோசடி
கோவில் முன்புள்ள கடைகள், திருமண மண்டபம் மற்றும் கோவில் வரிப்பணம் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.70 லட்சத்தை மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்தனர்.
ஆட்டையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே வேலநத்தம் கருக்கம்பாளையத்தார் தெருவை சேர்ந்தவர் ராஜவேல். இவர் முன்னாள் ஊர் தனக்காரராக பணியாற்றியவர்.
வேலநத்தம் பகுதியில் உள்ள ஊர்சொத்துக்களான கோவில் முன்புள்ள கடைகள், திருமண மண்டபம் மற்றும் கோவில் வரிப்பணம் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.70 லட்சத்தை மோசடி செய்ததாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.