செய்திகள்
செய்யாறு அருகே வெறிநாய் கடித்து 13 பேர் காயம்
செய்யாறு அருகே உள்ள கீழ் புதுப்பாக்கம் கிராமத்தில் வெறிநாய் ஒன்று புகுந்தது. தெருவில் இருந்த பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ் புதுப்பாக்கம் கிராமத்தில் இன்று காலை வெறிநாய் ஒன்று புகுந்தது. தெருவில் இருந்த பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் 13 பேர் படுகாயமடைந்தனர். சுதாரித்துக்கொண்ட பொதுமக்கள் நாயை விரட்டினர். ஆனால் நாய் தப்பி சென்றுவிட்டது. நாய் கடித்ததில் படுகாயமடைந்த 13 பேரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஊருக்குள் புகுந்து வெறிநாய் கடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தப்பி ஓடிய வெறிநாயிடமிருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.