செய்திகள்
காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் போலீஸ் என கூறி தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
கோவையில் போலீஸ் என கூறி கூலி தொழிலாளியிடம் பணம் அபேஸ் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பாகல்பட்டி பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார் (35) கூலித் தொழிலாளி.
இவர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் குடி போதையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் தங்களை போலீசார் என கூறி சிவகுமாரிடம் இருந்து ரூ. 200-ஐ பறித்தனர்.அந்த சமயம் அங்கு போலீசார் ரோந்து வந்தனர். அவர்களிடம் சிவகுமார் தன்னிடம் பணம் பறித்தது குறித்து கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் சிவகுமாரிடம் பணம் பறித்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் கோவை காந்திபுரத்தை சேர்ந்த அபுதாகீர் (40), மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த ஆனந்து (55) என்பது தெரிவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.