செய்திகள்
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு விடுத்தார் சபாநாயகர் தனபால்
தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் தனபால் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
இந்நிலையில், மரபுப்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக சபாநாயகர் தனபால் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது சட்டசபையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.