செய்திகள்
விபத்து

நெல்லையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து பலி

Published On 2020-01-04 07:59 GMT   |   Update On 2020-01-04 07:59 GMT
நெல்லையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம், ராஜீவ் காந்திநகரை சேர்ந்தவர் கணேசன். இவர் நெல்லை டவுனில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாந்தி (வயது45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 1-ந்தேதி புத்தாண்டு அன்று கணேசனும், அவரது மனைவி சாந்தியும் மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர். பேட்டை அருகே சென்றபோது, ரோட்டின் குறுக்கே ஒருவர் திடீரென்று கடக்க முயன்றதால், கணேசன் ‘பிரேக்’ பிடித்தார்.

அப்போது பின்னால் இருந்த சாந்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளும் கீழே விழுந்ததில் கணேசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு சாந்தி பரிதாபமாக இறந்தார். கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News