செய்திகள்
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்
தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னை:
பின்னர் உடல் நிலை சற்று தேறியதால் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் பி.எச்.பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
மரணமடைந்த பி.எச்.பாண்டியன் அ.தி.மு.க.வின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்தவர். கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் 3 முறை எம்.எல்.ஏ.வாக சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
அதன் பிறகு அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த பிறகு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பி.எச்.பாண்டியனுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார். கடந்த 1999-ம் ஆண்டு இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்த சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலாக குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது அ.தி.மு.க.வின் மூத்த தலைவராக ஆலோசனை வழங்கி வந்தார்.
இவரது மகன் மனோஜ் பாண்டியன் தற்போது அ.தி.மு.க. அமைப்புச்செயலாளராக உள்ளார்.