செய்திகள்
மீன்பிடிக்க சென்றபோது நாகாவதி அணையில் மூழ்கி தொழிலாளி பலி
தர்மபரி அருகே மீன்பிடிக்க சென்றபோது நாகாவதி அணையில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சிவன் (வயது 45). தொழிலாளியான இவர் நாகாவதி அணையில் மீன்பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அணை தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அணையில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சிவன் (வயது 45). தொழிலாளியான இவர் நாகாவதி அணையில் மீன்பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அணை தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அணையில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.