செய்திகள்
பர்கூர் அருகே சுவர் கண்ணாடி விழுந்து கொத்தனார் பலி
பர்கூர் அருகே சுவர் கண்ணாடி விழுந்ததில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்ததூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சரவணன் (வயது 43). இவர் கட்டிடம் கட்டும் வேலை பாத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ம்தேதி மதியம் பர்கூர், கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த கட்டிடத்தின் சுவரில் இருந்த கண்ணாடி திடீரென சரவணன் மீது விழுந்தது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அங்கு நின்றவர்கள் அவரை மீட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பர்கூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.