செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்பெண்கள் மாயம்
தேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாப்பிரெட்டிபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி.
இவரது 19 வயது மகள் திடீரென மாயமானார். இது குறித்து ஆசைத்தம்பி தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேப்போல் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது 19 வயது மகள் திடீரென மாயமானர். இதுகுறித்து அவரது தந்தை வேணுகோபால் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2 புகார்களின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.