செய்திகள்
நகை, பணம் கொள்ளை

புதுக்கடை அருகே வீட்டின் மாடி கதவை உடைத்து பணம்-நகை கொள்ளை

Published On 2019-12-30 09:25 GMT   |   Update On 2019-12-30 09:25 GMT
புதுக்கடை அருகே வீட்டின் மாடி கதவை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

புதுக்கடையை அடுத்த சாத்தன்பறம்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அமுதகலா (வயது 36).

இவர் சம்பவத்தன்று தனது தோழி மற்றும் உறவினர்களுடன் வெளியில் சென்றிருந்தார். பின்னர் இரவு தூங்குவதற்காக தனது தோழியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் கீழ்பகுதியில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம மனிதன் வீட்டில் மாடியில் உள்ள கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம், வளையல் என மொத்தம் 6¼ பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு வீட்டின் கீழ்தளத்தில் வந்த கொள்ளையன் அமுதகலாவின் தோழியின் மகள் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றான். திடுக்கிட்டு எழுந்த அவரது மகள் திருடன் திருடன் என்று அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் அந்த கொள்ளையனை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம மனிதன் அங்கிருந்து மாடி வழியாக தப்பி சென்று விட்டான்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News