செய்திகள்
கைது

மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது

Published On 2019-12-25 08:35 GMT   |   Update On 2019-12-25 08:35 GMT
மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை சோலையழகு புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 30). இவர் விளக்குத்தூண் வி.வி.கிரி ரோடு சுந்தரராஜபுரம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் சதீஷ்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரிடமிருந்த 1000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்து சதீஷ்குமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி சதீஷ்குமாரிடம் பணம் பறித்த ஜீவா நகரைச் சேர்ந்த தினேஷ் (30), செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சபரீஷ் (35) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள் ஆவார்கள். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

Tags:    

Similar News