செய்திகள்
மரணம்

தென்காசி அருகே பைக் விபத்தில் கொத்தனார் பலி

Published On 2019-12-20 09:40 GMT   |   Update On 2019-12-20 09:40 GMT
தென்காசி அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடை கால்வாயில் விழுந்த விபத்தில் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி:

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் நயினார் (வயது 38), கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று இரவு தனது பைக்கில் ஆயிரப்பேரியிலிருந்து குற்றாலம் சென்று கொண்டிருந்தபோது பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து ஆயிரப்பேரி பகுதியிலுள்ள மூங்கில் ஓடை கால்வாயில் விழுந்துள்ளது. இதில் நயினார் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நயினாரின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News