செய்திகள்
விபத்து

தக்கலை அருகே பாலிடெக்னிக் ஊழியர் டெம்போ மோதி பலி

Published On 2019-12-19 11:47 GMT   |   Update On 2019-12-19 11:47 GMT
தக்கலை அருகே இன்று காலை டெம்போ மோதிய விபத்தில் பாலிடெக்னிக் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

தக்கலை அருகே ராமன் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் அழகேஷ், (வயது 48). இவரது மனைவி லதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அழகேஷ், நாகர்கோவில் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அழகேஷ், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

தக்கலை அருகே குமாரகோவில் சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டெம்போ ஒன்று அழகேஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும், தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பிணமாக கிடந்த அழகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அழகேஷ் பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் வந்தனர். விபத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கு பிறகே போக்குவரத்து சீரானது.

தற்போது விபத்து நடந்த பகுதியில் சாலையில் தடுப்பு வேலிகள் உள்ளது. விபத்திற்கு தடுப்பு வேலிகள் இருப்பதை காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் சமீப காலமாக நடந்த விபத்துக்களில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

எனவே இந்த தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News