செய்திகள்
தற்கொலை

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2019-12-18 09:50 GMT   |   Update On 2019-12-18 09:50 GMT
தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை அருகே உள்ள குருங்குளம் சர்க்கரை ஆலையை சேர்ந்தவர் கண்ணன் (வயது27). இவரது மனைவி அனுசுயா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் கண்ணன் வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவதன்று மனவேதனையால் கண்ணன் அவருடைய வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து கண்ணனின் மனைவி அனுசுயா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News