செய்திகள்
தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் மகள் சரண்யா (வயது 17). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சரண்யா இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சுதாராணி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனி செட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
பெரியகுளம் வடகரை காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி பாண்டீஸ்வரி (வயது 28). சம்பவத்தன்று கடைக்கு சென்ற பாண்டீஸ்வரி வீடு திரும்பவில்லை. இது குறித்து பெரியகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரியை தேடி வருகின்றனர்.
தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் மகள் சரண்யா (வயது 17). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சரண்யா இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சுதாராணி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனி செட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
பெரியகுளம் வடகரை காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி பாண்டீஸ்வரி (வயது 28). சம்பவத்தன்று கடைக்கு சென்ற பாண்டீஸ்வரி வீடு திரும்பவில்லை. இது குறித்து பெரியகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரியை தேடி வருகின்றனர்.