செய்திகள்
விபத்து

வெள்ளகோவிலில் வாகனம் மோதி பெண் பலி

Published On 2019-12-15 17:21 GMT   |   Update On 2019-12-15 17:21 GMT
வெள்ளகோவிலில் நடந்து சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சேரன் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (60). இவரது கணவர் பழனிசாமி கடந்த 8 வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனை தொடர்ந்து தனியாக வசித்து வந்த பழனியம்மாள் திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு வேனில் இருந்து இறங்கி வெள்ளகோவில்- தாராபுரம் ரோட்டில் சேரன் நகரில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழனியம்மாள் பலத்த காயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பழனியம்மாள் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News