செய்திகள்
கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
பாளை அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 46), கூலித்தொழிலாளி. இவரது மனைவி திருப்பதியம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கூலி வேலைக்கு சென்ற குமாருக்கும், மற்றொரு இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. குமார் மனைவிக்கு தெரியாமல் அவ்வப்போது கள்ளக்காதலியுடன் சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார். அவர் சரியாக வீட்டுக்கு வராததால், அவரது மனைவி திருப்பதி கணவர் குறித்து விசாரித்தார். அப்போது குமாருக்கும், மற்றொரு இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.
இதனால் ஆவேசமடைந்த திருப்பதி, குமாரை கண்டித்தார். இதில் மனம் உடைந்த குமார் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 46), கூலித்தொழிலாளி. இவரது மனைவி திருப்பதியம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கூலி வேலைக்கு சென்ற குமாருக்கும், மற்றொரு இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. குமார் மனைவிக்கு தெரியாமல் அவ்வப்போது கள்ளக்காதலியுடன் சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார். அவர் சரியாக வீட்டுக்கு வராததால், அவரது மனைவி திருப்பதி கணவர் குறித்து விசாரித்தார். அப்போது குமாருக்கும், மற்றொரு இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.
இதனால் ஆவேசமடைந்த திருப்பதி, குமாரை கண்டித்தார். இதில் மனம் உடைந்த குமார் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.