செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

காதல் தோல்வி- கோவையில் வாலிபர் தற்கொலை

Published On 2019-12-12 11:30 GMT   |   Update On 2019-12-12 11:30 GMT
கோவை பீளமேடு அருகே காதல் தோல்வி காரணமாக அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
கோவை:

அசாம் மாநிலம் ராமந்தபூரை சேர்ந்தவர் மோட்டாராய் ரியான் (வயது 19). இவர் கடந்த ஒரு வருடமாக கோவை பீளமேடு அருகே உள்ள காளப்பட்டி பகுதியில்அறை எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மோட்டாராய் ரியான் அவரது சொந்த ஊரில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே போனில் தகராறு ஏற்பட்டது. இதனால் வெறுப்படைந்த அந்த இளம்பெண் மோட்டாராய் ரியானுடன் பேசுவதை தவிர்ந்து வந்தார்.

இதன்காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று தனது அறையில் தனியாக இருந்த மோட்டாராய் ரியான் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மோட்டாராய் ரியானின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News