செய்திகள்
கைது

தஞ்சையில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது

Published On 2019-12-11 09:41 GMT   |   Update On 2019-12-11 09:41 GMT
தஞ்சையில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள டாஸ்மாக்கடைகளில் மர்ம நபர்கள் சிலர் மதுபாட்டில் வாங்கி பதுக்கிவைத்து அதனை இரவு 10 மணிக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவையாறு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் கட்டைப்பையுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது போலீசார் வருவதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சையை அடுத்த விளாரை சேர்ந்த ரவி (வயது55) என்பதும், அவர் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற முருகையா (56) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்தும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News