செய்திகள்
ஆவடி அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
ஆவடி அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.