செய்திகள்
கோப்புப்படம்

செஞ்சி அருகே முயல்வேட்டைக்கு சென்ற வாலிபர் மின் வேலியில் சிக்கி பலி

Published On 2019-12-06 09:16 GMT   |   Update On 2019-12-06 09:16 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே முயல்வேட்டைக்கு சென்ற வாலிபர் மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் சரவணன் (வயது 25).

தந்தை- மகன் 2 பேரும் முயல்வேட்டையில் ஆர்வம் உள்ளவர்கள். அதன்படி நேற்று அதிகாலை 2 பேரும் கொங்கரபட்டு மேல்சேலூர் சாலை பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றனர்.

அந்த பகுதியில் உளுந்து பயிரில் காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்க மேல்சேலூர் கிராமத்தை சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் தன் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.

அதனை கவனிக்காமல் சரவணன், மின்வேலியில் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அலறிதுடித்தவாறு தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த ராஜீ சத்தம் கேட்டு ஓடிவந்தார்.

சரவணன் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தார்.

இது குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்த விசாரனை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News