செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரெயிலில் அடிபட்டு பூ வியாபாரி பலி
ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் பூ வியாபாரி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 61), பூ வியாபாரி. இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் சிதம்பரம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிதம்பரம் ரெயிலில் அடிபட்டு இறந்தது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.