செய்திகள்
கொள்ளை (கோப்புப்படம்)

ராஜாஅண்ணாமலைபுரத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை

Published On 2019-12-05 09:01 GMT   |   Update On 2019-12-05 09:01 GMT
சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் வெளிநாட்டு டாலர் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

ராஜாஅண்ணாமலைபுரம் கேசவ பெருமாள் புரம் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திரன். ஜவுளிக்கடை அதிபர்.

இவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணம், 1100 அமெரிக்க டாலர் மற்றும் வைர கம்மல்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் பணம் மற்றும் டாலர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜவுளிக்கடை அதிபர் ரவீந்திரனின் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களே அமெரிக்க டாலர் மற்றும் பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News