செய்திகள்
பலியான இளம்பெண்

கே.கே.நகரில் பாம்பு கடித்த இளம்பெண் பலி

Published On 2019-12-05 06:45 GMT   |   Update On 2019-12-05 06:49 GMT
கே.கே.நகரில் ஷூவை சுத்தம் செய்த போது அதிலிருந்த விஷ பாம்பு கடித்ததில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போரூர்:

கே.கே.நகர் அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் பழனி. கார்பெண்டராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சுமித்ரா (வயது 35). இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த “ஷூவை” சுமித்ரா எடுத்தார். அப்போது ஷூவிற்குள் பதுங்கி இருந்த வி‌ஷ பாம்பு சுமித்ரா கையில் கடித்தது.

இதில் அலறி துடித்த சுமித்ராவை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News