செய்திகள்
ரெயில் (கோப்புப்படம்)

தாம்பரம்- கோவைக்கு சிறப்பு ரெயில் ஜனவரி 14-ந்தேதி இயக்கப்படுகிறது

Published On 2019-12-04 11:17 GMT   |   Update On 2019-12-04 11:17 GMT
சென்னை தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஸ்வேதா சிறப்பு ரெயில் ஜனவரி 14-ந் தேதி இயக்கப்பட உள்ளது.
கோவை:

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை - கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாட வசதியாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி ஜனவரி 14-ந் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஸ்வேதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் ஜனவரி 14-ந் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை வந்தடையும்.
Tags:    

Similar News