செய்திகள்
தீப்பிடித்த குடோனின் மேல்பகுதியில் இருந்து குபுகுபுவென வெளியேறும் கரும்புகை.

கோவையில் இன்று அதிகாலை குடோனில் தீ விபத்து

Published On 2019-12-04 09:32 GMT   |   Update On 2019-12-04 09:32 GMT
கோவையில் இன்று அதிகாலையில் குடோனில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி அணைத்தனர்.
கோவை:

கோவை வெரைடிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). இவர் 5 முக்கு சந்திப்பு என்.எச். ரோட்டில் உள்ள 3 மாடி வாடகை கட்டிடத்தில் பேக் கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு இவர் வழக்கம் போல கடை மற்றும் குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை இவரது குடோன் உள்ள 3-வது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 1 மணி நேரம் போராடி பேக் குடோனில் பிடித்த தீயை போராடி அணைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் குடோனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ஏராளமான பேக்குகள் எரிந்து நாசமானது.
Tags:    

Similar News