செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-12-02 14:39 GMT   |   Update On 2019-12-02 14:39 GMT
போச்சம்பள்ளி அருகே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி கண்ணகி நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 59). இவர் ஓய்வு பெற்ற அரசு டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 55). இவருக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட புவனேஸ்வரி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். நேற்று இரவு சுமார் 8 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News