செய்திகள்
விபத்து

கொல்லங்கோடு அருகே பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

Published On 2019-11-29 11:16 GMT   |   Update On 2019-11-29 11:16 GMT
கொல்லங்கோடு அருகே பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கொல்லங்கோடு செறுகுழி பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 23). இவர் நேற்று மாலையில் வீட்டில் இருந்து சூழலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மங்குழி அருகே அவர் சென்றபோது சாலையோரம் கல்லூரி பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சை அஜின் கடக்க முயன்றார். அப்போது எதிரே மற்றொரு கல்லூரி பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜின் படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News