செய்திகள்
மூலைக்கரைப்பட்டியில் சாலையில் ரகளை செய்தவர் கைது
மூலைக்கரைப்பட்டியில் சாலையில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் முனைஞ்சிபட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த இசக்கிதுரை (வயது 24) அங்கு ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.