செய்திகள்
பெற்றோர் திட்டியதால் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
சேலம் அருகே பெற்றோர் திட்டியதால் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி ஏரிபுதூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராஜகுமாரன் (வயது 30).
இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர், கடந்த 23-ம் தேதி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். அப்போது ராஜகுமாரனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜகுமாரனை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சிக் கொல்லி விஷத்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி ஏரிபுதூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராஜகுமாரன் (வயது 30).
இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர், கடந்த 23-ம் தேதி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். அப்போது ராஜகுமாரனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜகுமாரனை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சிக் கொல்லி விஷத்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.