செய்திகள்
கோப்புப்படம்

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது

Published On 2019-11-23 10:59 GMT   |   Update On 2019-11-24 06:12 GMT
இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். 3500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்:

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராமேசுவரம் அனைத்து மீனவர் சங்க கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தின் முடிவில் இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராமேசுவரம் மீனவர்கள் காலவரைற்ற வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். 3500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வருகிற 29-ந் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜேபக்சேயிடம் மத்திய அரசு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News