செய்திகள்
இண்டூரில் தூக்குபோட்டு பெண் தற்கொலை
இண்டூரில் கூலி வேலை செய்து வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ். இவரது மனைவி அமுதா (வயது35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கூலி வேலை செய்து வந்த அமுதா நேற்றிரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக கிடந்த அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.