செய்திகள்
பிஎஸ்எல்வி சி47

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 27-ந்தேதி ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு

Published On 2019-11-21 08:38 GMT   |   Update On 2019-11-21 08:38 GMT
பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதிக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.
சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்சவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 9.28 மணிக்கு ஏவ இஸ்ரோ நிறுவனம் முடிவு செய்து இருந்தது.

இந்த நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதிக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.



பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ்.எல். வகையில் 21-வது ராக்கெட் ஆகும். சதீஷ்சவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது.

509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ள கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது.
Tags:    

Similar News