செய்திகள்
கோப்பு படம்

அம்பத்தூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் - 2 பேர் கைது

Published On 2019-11-20 10:49 GMT   |   Update On 2019-11-20 10:49 GMT
அம்பத்தூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் 3 ஆந்திர அழகிகளை மீட்டனர்.
அம்பத்தூர்:

அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் ஆந்திர அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது.

மருதராஜ் என்பவர் நண்பரான பிரபாகரன் என்பவருடன் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.

இதில் மருதராஜ் போலியாக பத்திரிகை நிருபர் என்றுகூறி வந்துள்ளார். அவரிடம் இருந்து அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆந்திர அழகிகள் 3 பேர் மீட்கப்பட்டனர்.
Tags:    

Similar News