செய்திகள்
கொலை

திருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை

Published On 2019-11-17 13:23 GMT   |   Update On 2019-11-17 13:23 GMT
திருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் டென்னிஸ்ராஜ் (வயது40). தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு 11 மணியளவில் டென்னிஸ்ராஜ் தனது தெருவில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் டென்னிஸ்ராஜை சூழ்ந்து கொண்டு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் உடலின் பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த டென்னிஸ்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி படுத்திக்கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஒடி விட்டது.

டென்னிஸ்ராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதையடுத்து டென்னிஸ்ராஜ் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். டென்னிஸ் ராஜை கொலை செய்தது செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட டென்னிஸ்ராஜுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News