செய்திகள்
கோப்பு படம்

மனைவியை மிரட்டுவதற்காக ஆசிட் குடித்த பைனான்சியர் பலி

Published On 2019-11-14 12:03 GMT   |   Update On 2019-11-14 12:03 GMT
கோவை போத்தனூர் அருகே மனைவியை மிரட்டுவதற்காக ஆசிட் குடித்த பைனான்சியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள நாச்சிமுத்து வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). பைனான்சியர்.

இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக கனகராஜ் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த கனகராஜ் குடிபழக்கத்துக்கு அடிமையானார்.

சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் தனது மனைவியை மிரட்டுவத்ற்காக கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார்.

சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News