செய்திகள்
பஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது
பஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. தென்னங்கன்று வியாபாரி. இவருடைய மனைவி முனியம்மாள். சம்பவத்தன்று கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுப்பிரமணி வீட்டுக்குள் புகுந்து நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதுபற்றி பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரியை சேர்ந்த ரிஸ்வான் (வயது 29), அவருடைய மனைவி ரேஷ்மா (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நகைகள் மீட்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. தென்னங்கன்று வியாபாரி. இவருடைய மனைவி முனியம்மாள். சம்பவத்தன்று கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுப்பிரமணி வீட்டுக்குள் புகுந்து நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதுபற்றி பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரியை சேர்ந்த ரிஸ்வான் (வயது 29), அவருடைய மனைவி ரேஷ்மா (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நகைகள் மீட்கப்பட்டன.