செய்திகள்
கைது

இறந்தவரின் போட்டோவில் இருந்த நகையை திருடிய பெண் கைது

Published On 2019-11-11 09:23 GMT   |   Update On 2019-11-11 09:23 GMT
மயிலாப்பூரில் காரியம் நிகழ்ச்சியில் இறந்தவரின் போட்டோவில் இருந்த நகையை திருடிய உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

மயிலாப்பூர் வி.எஸ்.பி. கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதற்கான காரியம் நிகழ்ச்சி கடந்த 22-ந்தேதி நடைபெற்றது. அப்போது பலராமனின் மனைவி போட்டோவில் அவர் அணிந்திருந்த தாலி செயினை மாட்டி வைத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்று விட்ட பிறகு நகையை காணவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அடையாறு இந்திரா நகரை சேர்ந்த உறவுக்கார பெண் மீனா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயினை திருடியதை ஒப்புக்கொண்டார். மீனாவை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News