செய்திகள்
குடும்பதகராறில் பழவியாபாரி தற்கொலை
திருச்சி அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதால் பழவியாபரி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி தாராநல்லூர் கண்மண்டி காலனிபகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 39). இவர் காந்திமார்க் கெட்டில் பழவியாபாரம் செய்து வந்தார்.
இவரது மனைவி கண்மணி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமாருக்கும் கண்மணிக்கும் இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
உடனே கண்மணி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ்குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கண்மணி காந்திமார்க்கெட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி தாராநல்லூர் கண்மண்டி காலனிபகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 39). இவர் காந்திமார்க் கெட்டில் பழவியாபாரம் செய்து வந்தார்.
இவரது மனைவி கண்மணி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமாருக்கும் கண்மணிக்கும் இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
உடனே கண்மணி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ்குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கண்மணி காந்திமார்க்கெட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.