செய்திகள்
மின்தடை

அரியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2019-11-01 10:05 GMT   |   Update On 2019-11-01 10:05 GMT
அரியமங்கலம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருச்சி:

திருச்சி அருகே அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அரியமங்கலம், நேருஜிநகர், எஸ்.ஐ.டி., பொன்மலை ராணுவ காலனி, கீழ அம்பிகாபுரம், வெங்கடேஸ்வராநகர், எம்.ஜி.ஆர்.நகர், மேல அம்பிகாபுரம், அண்ணாநகர், கோல்டன் நகர், காவேரி நகர், ஆண்டாள் நகர், ராஜப்பா நகர், ரெயில் நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், காட்டூர், பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், பாலாஜிநகர் ஒரு பகுதி,

மேலகல்கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, கீழக்குறிச்சி, ஆலத்தூர், நத்தமாடிப்பட்டி, திருநகர், அடைக்கல அன்னைநகர், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி ஒரு பகுதி, செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News