செய்திகள்
மூதாட்டி இறந்து கிடக்கும் காட்சி.

இருமத்தூர் அருகே மழையால் சுவர் இடிந்து மூதாட்டி பலி

Published On 2019-10-31 15:04 GMT   |   Update On 2019-10-31 15:04 GMT
இருமத்தூர் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட இருமத்தூர் அடுத்த கொன்றம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமலா (வயது 68).

கணவரை இழந்த இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தார். இவருக்கு முருகன் (45) என்ற மகன் உள்ளார். அவர் நாகரசம்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக விமலா வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வி.ஏ.ஓ. மகாலிங்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News