செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2019-10-31 10:47 GMT   |   Update On 2019-10-31 10:47 GMT
ராமநாதபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கலந்து கொண்டு படித்த வேலைவாய்ப்பற்ற மாணவ, மாணவிகள் பயன் பெறலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 12-ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வேலைவாய்ப்பு சந்தையின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News