செய்திகள்
அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே கொம்மஞ்சேரி கிராமம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தில் கொத்தனார். இவரது மனைவி கமலா(28), இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று கமலா அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாபேட்டை போலீசார் கமலாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வலங்கைமான் தாலுக்கா முனியூர் கிராமத்தை சேர்ந்த கமலாவின் தந்தை காளிமுத்து(60) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே கொம்மஞ்சேரி கிராமம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தில் கொத்தனார். இவரது மனைவி கமலா(28), இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று கமலா அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாபேட்டை போலீசார் கமலாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வலங்கைமான் தாலுக்கா முனியூர் கிராமத்தை சேர்ந்த கமலாவின் தந்தை காளிமுத்து(60) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.