செய்திகள்
டாஸ்மாக் கடை

மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் மதுபான கடைகள் அடைப்பு

Published On 2019-10-25 10:31 GMT   |   Update On 2019-10-25 10:31 GMT
மதுரை மாவட்டத்தில் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை உதவி ஆணையர் (கலால்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 27-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் நினைவுநாள் மற்றும் 30-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை தின விழா நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டும் வகையில் மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், விடுதியுடன் கூடிய மது அருந்தகம், தேசிய மாணவர் படை அங்காடி, படை வீரர் கேண்டீன் ஆகியவை வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் மூடப்பட்டு இருக்கும்.

அந்த நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4 நாட்களும் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது. மேற்கண்டவாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News