செய்திகள்
விபத்து

கோவையில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2019-10-25 09:36 GMT   |   Update On 2019-10-25 09:36 GMT
கோவையில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பேரூர் சென்னனுரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அம்சவேணி வயது (60). சம்பவத்தன்று இவர் மாதம்பட்டி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து அம்சவேணி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அம்சவேணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

இதே போல் கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (70). சம்பவத்தன்று இவர் தனது ஸ்கூட்டரில் வெள்ளலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஈஸ்வரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஈஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News