செய்திகள்
முத்தியால்பேட்டையில் கல்லூரி சென்ற மாணவி மாயம்
முத்தியால்பேட்டையில் கல்லூரி சென்ற மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை வாழைகுளம் முனிசிபல் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 19).
இவர் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் சுப்புலட்சுமி கல்லூரி செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால், மாலையில் கல்லூரி முடிந்தும் சுப்புலட்சுமி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுப்புலட்சுமி இல்லை.
இதையடுத்து சுரேஷ் தனது மகள் மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்கு பதிவு செய்து மாயமான சுப்புலட்சுமியை தேடி வருகிறார்.
முத்தியால்பேட்டை வாழைகுளம் முனிசிபல் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 19).
இவர் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் சுப்புலட்சுமி கல்லூரி செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால், மாலையில் கல்லூரி முடிந்தும் சுப்புலட்சுமி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுப்புலட்சுமி இல்லை.
இதையடுத்து சுரேஷ் தனது மகள் மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்கு பதிவு செய்து மாயமான சுப்புலட்சுமியை தேடி வருகிறார்.