செய்திகள்
கைது

மீஞ்சூர் அருகே லாரியில் வந்து மாட்டை கொன்று கடத்தியவர் கைது

Published On 2019-10-24 06:38 GMT   |   Update On 2019-10-24 06:38 GMT
மீஞ்சூர் அருகே லாரியில் வந்து மாட்டை கொன்று கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் அடிக்கடி மாயமாகி வந்தன. இந்த நிலையில் மினி லாரியில் வந்த 4 பேர் கும்பல் காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை பிடித்து அறுத்து கொன்றனர். பின்னர் மாட்டின் உடலை லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர்.

இதனை பார்த்து அப்பகுதி மக்கள் திரண்டதும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவரை மட்டும் லாரியுடன் மடக்கி பிடித்து மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் எண்ணூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பது தெரிந்தது.

Tags:    

Similar News